8 இடங்களில் வெடிகுண்டு; 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு மிரட்டல்

உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகர் பகுதியில் 8 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்திற்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கணேசன்(42) என்பவரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் கணேஷன்(48). கூலி தொழிலாளியான இவர் குடி போதையில் அடிக்கடி 108 சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த கணேஷன் 108 அவசர சேவை மையத்திற்கு 3 முறை அழைத்து  தாம்பட்டி மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் 8 இடங்களில் வெடி குண்டு வைத்து உள்ளதாகவும் முதலமைச்சர் வீட்டில் வெடி குண்டு இருப்பதாக கூறினால் எவ்வாறு விரைவாக சென்று கண்டு பிடிப்பீர்களோ அதே போல விரைவாக வந்து கண்டு பிடித்துகொள்ளுங்கள் என்று கூறி போன்காலை துண்டித்துள்ளார். 

அதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் அவர் பேசிய செல்போன் எண் மூலம் கணேஷனின் இடத்தை கண்டுபிடித்து  அதிகாலையில் கைது செய்து லவ்டேல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *