சிபிஎம் – காங்கிரஸ் கூட்டணி முறிவு; தனித்து போட்டி என அறிவிப்பு
தெலங்கானாவில் சிபிஎம் – காங்கிரஸ் கூட்டணி முறிவு தனித்து போட்டியிடும் 17 தொகுதிக்கான பட்டியல் வெளியிட்ட சி.பி.எம்.கட்சி தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டு இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் போட்டியிடுவதற்கான தொகுதிகளை கேட்டு முடிவுக்காக காத்திருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எந்தவித அறிவிப்பு வெளியிடவில்லை.
இதனால் இன்று மாலை 3 மணி காங்கிரஸ் கட்சி முடிவை அறிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு எட்டாததால் முதற்கட்டமாக சி.பி.எம்.கட்சி 17 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் நல்கொண்டா, பத்ராச்சலம், அஸ்வராவ்பேட், பாலேர், மதிரா, வைரா, கம்மம், சத்துப்பள்ளி, மிரியாலகூடம், நகிரேகல், புவனகிரி, ஹுசூராபாத், கோதாட், ஜனகம், இப்ரகிம்பட்னம் , பட்டான்செருவு, முஷுராபாத் ஆகிய இடங்களில் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.