ஆந்திரா, தெலங்கானாவில் வெளியானது ‘லியோ’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. 

இந்த படம் எப்பொதும் வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்த லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியது. தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு மொழியை சேர்ந்தவர்களுக்கும் விஜயின் ரசிகர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் லியோ படத்தின் முதல் காட்சியை அதிகாலை 4 மணிக்கு வெளியிட அனுமதிக்க தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை. மாறாக காலை 9 மணிக்கே முதல் காட்சியை திரையிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.

அதேநேரம் ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்திருந்தன. அவ்வாறு ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில்  அதிகாலை 5 மணிக்கு லியோ திரைப்படம் வெளியானது.  இதனால் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள ரசிகர்கள் ஆந்திராவிற்கு வந்து படம் பார்த்து வருகின்றனர் 

தியேட்டர் வளாகங்கள் முழுக்க பேனர்கள், கட் அவுட்கள், போஸ்டர்கள், தோரணங்கள் என விஜய் ரசிகர்கள்  லியோ படம் வெளியாவதை முன்னிட்டு தியேட்டர்களில் விடிய விடிய கொண்டாட்டங்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *