கணவனை தலையணை வைத்து கொலை செய்த மனைவி கைது…

கணவன் முகத்தில் தலையணை வைத்து மனைவி கொலை செய்தது போலீசார் விசாரணையில் அம்பலம் திருவள்ளூர் அடுத்த வாணியன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ரமேஷ் கடந்த 11ஆம் தேதி மர்மமான முறையில் படுக்கையில் உயிரிழந்து கிடந்தார்.

இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவர் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்திருந்த நிலையில் பிரேத பரிசோதனையில் மூச்சி திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்ததால்

போலீசார் அவருடைய மனைவி தங்கலட்சுமி வயது (27) விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்ததில் கணவன் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி குடித்து வீட்டில் தகராறு ஈடுபடுவதால்  ஆத்திரமடைந்து  கணவன்   முகத்தில் தலையணை வைத்து கொலை செய்ததாக மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் மனைவி தங்கலட்சுமி கைது செய்து புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *