லூஸ் கேர்-இல் வந்த மாணவியின் தலைமுடியை வெட்டிய அராஜக ஆசிரியர்..!

காக்கிநாடாவில் பள்ளிக்கு தலைவிரி கோலமாக வந்த மாணவிகளின் தலைமுடியை கத்தரித்த தலைமை  ஆசிரியர் பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் செய்தால் தலைமை ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கும் செய்து உத்தரவு 

ஆந்திர மாநிலம்  கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில்  மாணவிகளின் தலைமுடியை  ஆசிரியர் கத்திரித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   காக்கிநாடா சூர்யநாராயணபுரத்தில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணா நகராட்சிப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை மங்காதேவி, மாணவிகளின் தனிப்பட்ட தூய்மை மற்றும் உடையில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் தண்டனை விதிக்கப்படும்  என தெரிவித்து வந்தார்.

ஆனால் ஆசிரியர் சொன்னதை காதில் வாங்காமல் 8 மற்றும் 9 ம்  வகுப்பு படிக்கும்  மாணவிகள் தலைவிரி கோலமாக  பள்ளிக்கு வந்தனர்.  ஆத்திரமடைந்த ஆசிரியை மங்காதேவி மாணவிகளின் தலைமுடியை  கத்திரித்தார். 

இந்த சம்பவம் குறித்து வீட்டிற்கு சென்றதும்  மாணவிகளின் பெற்றோரின் கடும் கோபம் அடைந்து மண்டல கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உயர் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்பித்தனர்.  மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்   ஆசிரியை மங்காதேவியை தற்காலிக  பணியிடை நீக்கம்  செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *