‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு

தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தும்  பதிவு செய்துள்ளார். அதில் சைக்கோ ஜெகன் சட்டவிரோதமாக சந்திரபாபுவை கைது செய்தது  சிறையில் கொள்ள முயற்சி மேற்கொள்வதாக சந்தேகம் வலுக்கிறது.  ஆதாரம் இல்லாத வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை ஜாமீன் கிடைக்காமல் ராஜமுந்திரி மத்திய சிறையில் வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளனர்.   

இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உயிருக்கு சிறையில் வைத்து ஆபாத்தை ஏற்படுத்த  அரசு திட்டம் தீட்டுகிறது. சந்திரபாபுவுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை, கொசுக்கள் அதிகம் என்று சிறை அதிகாரிகளிடம் கூறினாலும் அதை பொருட்படுத்துவதில்லை. சிறையில்  ரிமாண்ட் கைதியாக இருந்த ராஜமுந்திரி கிராமிய மண்டலம் தவளேஸ்வரத்தைச் சேர்ந்த கஞ்செட்டி வீரவெங்கட சத்தியநாராயணா டெங்குவால் உயிரிழந்தார்.  

சந்திரபாபுவுக்கும் இதேபோன்று செய்ய சைக்கோ ஜெகன் சூழ்ச்சிகள் செயல்படுத்தப்படுத்தி வருகிறார்.  சந்திரபாபுவுக்கு என்ன நடந்தாலும் அதற்கு சைக்கோ ஜெகன் தான் பொறுப்பு என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு ஆந்திரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *