’அப்பா தவறு செய்ய மாட்டார்’ சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்
என் நண்பர் சந்திரபாபு தவறு செய்ய மாட்டார் அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கில் அவர் செய்த நற்செயல்களும், பொதுச் சேவையும் அவரை வெளியே கொண்டு வரும் என நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ்க்கு போன் செய்து தைரியம் கூறினார்
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை அவரது ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கியதில் மோசடி நடந்திருப்பதாக கூறி சி.ஐ.டி போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு பல தேசிய தலைவர்கள் சந்திரபாபு கைது சட்டவிரோதமானது என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு மகன் லோகேஷ்க்கு போன் செய்து ஆறுதல் தெரிவித்து தைரியம் கூறினார். அப்போது எனது நண்பர் சந்திரபாபு ஒரு சிறந்த போராளி, மாநில வளர்ச்சியும் நலனும்தான் அவருக்கு லட்சியம்.
மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் சந்திரபாபு. பொய் வழக்குகளும், சட்ட விரோத வழக்குகளும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. என் நண்பர் சந்திரபாபு ஒரு போதும் தவறு செய்ததில்லை. அவரின் நற்செயல்களும், பொதுச் சேவையும் அவரை வெளியே கொண்டு வரும் என்று ரஜினி லோகேஷ்க்கு தெரிவித்தார்.