மீண்டும் நிபா வைரஸ்; கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

கேரளா நிபா வைரஸ் எதிரொலி – கோவை வாளையாறு உள்ளிட்ட 11 எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம். 

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பில் இருவர் உயிரிழந்த நிலையில், 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. மேலும் அவர்கள் 4 பேருடன் தொடர்பில் இருந்த 126 பேர் கேரளா சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து கோவை வருவோரை கண்காணிக்கவும், அவர்களுக்கு  காய்ச்சல் பரிசோதனை செய்ய கோவை – கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கோழிகோட்டில் இருந்து வருவோரை தனியாக கண்டறிந்து விபரங்கள் சேகரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *