தாத்தா, தந்தை  போல் உதயநிதியும் பாசிச அரசை பந்தாடுகிறார்; தயாநிதிமாறன்

தாத்தா செய்தது போல், தந்தை செய்தது போல் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் பாசிச பாஜக அரசு உள்ளே வராமல் தடுக்கின்ற அளவிற்கு செயல்படுகிறார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. இன்று மாலை நடந்த இறுதிகட்ட போட்டியை எம்.பியும் திமுக வின் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளருமான தயாநிதிமாறன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி, ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். 

முன்னதாக எம்பி தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனை மற்றும் மணிப்பூர் கலவரம் குறித்து கர்ஜனை பேச்சு குறித்த வீடியோ திரையிடப்பட்டது. அப்போது அவரின் பேச்சைக்கேட்டு பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

பின்னர் தயாநிதி மாறன் எம்.பி.பேசியவதாவது, நான் பல்வேறு இடங்களுக்கு சென்று கபடிப்போட்டியை பார்த்திருக்கின்றேன். ஆனால் இங்கு உங்களின் (ரசிகர்களின்) ஆர்வத்தை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. முறுக்கிற்கு மட்டுமே பெயர் போன ஊர் என்று நினைத்தேன். 

ஆனால் ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டிற்கும் பெயர் போன ஊராக உள்ளது. இங்கு ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்று கடந்த முறை உதயநிதி ஸ்டாலிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சொன்னார்கள். இந்த முறை நானும், அமைச்சருடன் சேர்ந்து சொல்கிறேன். மமணப்பாறையில் ஸ்டேடியம் அமைக்க நானும் முயற்சி எடுப்பேன். தாத்தா செய்தது போல், தந்தை செய்தது போல் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் பாசிச பாஜக அரசு உள்ளே வராமல் தடுக்கின்ற அளவிற்கு செயல்பட்டு வருகிறார். 

தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழியை புகழ்ந்து பேசினார். சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கையின் போது சுமார் ஒரு மணி நேரம் எந்தவித சீட்டும் இல்லாமல் பேசும் அளவிற்கு திறன் வாய்ந்த அமைச்சராக உள்ளார். என்றதுடன் தொடர்ந்து பேசிய அவர் விளையாட்டு மேம்பாட்டு அணி என்பது புதிதாக உருவாக்கப்பட்டதாகும், திராவிட மாடல் ஆட்சி எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே தலைவர் ஸ்டாலினின் குறிக்கோள், 

உதயநிதி சாதனம் குறித்து பேசியதால் அமித்ஷா சொல்கிறார் உதயநிதி இதுபோல் பேசக்கூடாது என்கிறார். இரண்டு ராக்கெட் அனுப்பப்பட்டது ஒன்று நிலாவுக்கு சந்திராயன் அனுப்பியதும், தற்போது சூரியனுக்கு அனுப்பட்டதிலும் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் அரசுப்பள்ளியில் படித்த தமிழர்கள் அதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான் என்றார். எம்பி பேச்சின் இடையே மைதானம் பொதுமக்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *