ஒன்றிய அரசே ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை கைவிடவும்… மதிமுக தீர்மானம்
ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை முடிவை கைவிட வேண்டும்! – சிவகாசி மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!!
சிவகாசி அருகே சித்து ராஜபுரம் கிராமத்தில் விருதுநகர் மத்திய மாவட்டத்தின் சிவகாசி தெற்கு ஒன்றிய மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் பங்கேற்க நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை கண்டித்து அதனை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோவை வேட்பாளராக கட்சியின் தலைமை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி, அவரது வெற்றிக்காக மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாடுபட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
மற்றும் அண்ணா பிறந்த தினமான வருகிற (செப்டம்பர்) 15ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மதிமுக மாநாட்டிற்கு ஏராளமான வாகனங்களில், பெரும் திரளானவர்கள் சென்று கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது