காலை உணவு திட்டம் கொண்டு வந்த  தமிழக முதல்வருக்கு நன்றி; பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்த பொற்கால ஆட்சி நடத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு  நன்றி தெரிவித்து அம்மைய நாயக்கனூர் தேர்வு நிலை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் தேர்வு நிலை பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது..கூட்டத்திற்கு தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.செயல் அலுவலர் ,துணைத் தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை எழுத்தர் செந்தில் தீர்மான அறிக்கை வாசித்தார். 

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் இந்தியாவின் முதல்வர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக முதல்வராக திகழும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பல்வேறு முத்தானத்திட்டங்களில் ஒன்றான 

அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நமது பேரூராட்சி பகுதிக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டமைக்கு தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு பேரூராட்சி மன்றம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 

மேலும் இந்த அம்மைநாயக்கனூர் பேரூராட்சியை வளர்ச்சி பாதைக்கு முன்னெடுத்து செல்லும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்களுக்கும்,பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களுக்கும் மாமன்றம் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாமன்ற கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *