விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் கிரையோஜனிக் எஞ்சின் சோதனை..!
ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜனிக் எஞ்சின் சோதனை. மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் விண்வெளி திட்டத்திற்கான சிஇ 20 என்ற கிரயோஜனிக் எஞ்சின் சோதனை இன்று நடைபெற்றது .12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். ககன் யான் விண்வெளி திட்டத்தில் எல் எம் வி 3 ராக்கெட்டின் மேல் நிலைக்கு சக்தி அளிக்கும் வகையில் சி இ 20 கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது.
ககன்யான் எனப்படும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் முழுமையாக தற்போது ஈடுபட்டு வருகிறது . வருகிற 2024 ஆம் ஆண்டு இது ஏவப்படுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் மனிதர்கள் ஆய்வு செய்வர். அதன்பின்பு அவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள பல இன்ஜின்களின் சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக ககன்யான் விண்வெளி கலத்தின் பயன்படுத்தப்பட உள்ள எல். எம்.வி.-3 என்ற ராக்கெட்டில் சி இ20 என்ற கிரோஜினிக் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கிரயோஜனிக் இன்ஜின் ஆனது நெல்லை மாவட்டம் மகேந்திர கிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று மகேந்திரகிரியில் சி இ 20 ராக்கெட் சோதனை
720 வினாடிகள் நடைபெற்றது. இதில் ராக்கெட்டின் உந்தும சக்தி , வெப்பம் தாங்கும் சக்தி உள்ளிட்ட காரணிகள் சோதிக்கப்பட்டன. இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். ககன் யான் விண்வெளி திட்டத்தில் எல் எம் வி 3 ராக்கெட்டின் மேல் நிலைக்கு சக்தி அளிக்கும் வகையில் சி இ 20 கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது.