எம்பிஏ படித்த மாற்றுத்திறனாளி வேலை கேட்டு மனு; முதல்வர் செய்த அதிரடி!

எம்பிஏ படித்த மாற்றுத்திறனாளி பெண் தனக்கு வேலை வழங்க வேண்டும் என வேப்பத்தூருக்கு வந்த தமிழக முதல்வரிடம் மனு. கவலைப்படாதே என முதல்வர் மனுவை பெற்றுக் கொண்ட ஆறுதல் கூறியதால் நெகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளி.

கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் எழுமிச்சங்காபாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உஷாராணி. இவர் எம்பிஏ படித்துள்ளார். தனக்கு ஏதேனும் வேலை வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் வேப்பத்தூருக்கு இன்று மதியம் வந்த முதல்வரை சந்திக்க வேண்டும் என பசுமடம் அருகே காத்திருந்த நிலையில், அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரை மட்டும் அங்கு நிற்க வைத்து  மற்றவர்களை எல்லாம் அப்புறப்படுத்தினர்.

சிறிது நேரத்தில் அவ் வழியே வந்த தமிழக முதல்வர் சாலையோரம் நின்றிருத்த மாற்றுத்திறனாளி உஷாராணியிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டார். அப்போது கண் கலங்கியபடி உஷாராணி தனக்கு ஏதேனும் வேலை பெற்று தரும்படி கூறியுள்ளார்.

அதற்கு தன்னிடம் தங்களது கோரிக்கை மனு அளித்துள்ளீர்கள், நிச்சயம் உங்களுக்கு உரிய வேலை கிடைக்கும் என நம்பிக்கையோடு உறுதி அளித்தார். இதனை நெகிழ்ச்சியோடு மாற்றுத்திறனாளி உஷாராணி  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *