4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை, கொலை செய்த தம்பதிக்கு 37 ஆண்டுகள் சிறை…!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கணவனுக்கு 37 ஆண்டுகள், மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார். கடந்த 02.11.22 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சேர்ந்த பிரகாஷ் – கௌரி தம்பதியரின் 4 வயது மகளான ஷிவானியை தனது வீட்டில் வைத்து ராஜேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.
இதற்கு அவரது மனைவி கீர்த்தனா உடந்தையாக இருந்துள்ளார் பின்னர் இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் மற்றும் கீர்த்தனாவை கொலை மற்றும் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி இன்று 21.08.23 பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில் ராஜேஷ்குமாருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும், கிருத்திகாவிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 8,000 அபராதம் விதித்து தீர்ப்புவழங்கினார்.
கீர்த்தனாவை நிலக்கோட்டை சிறைச்சாலைக்கும் ராஜேஷ்குமார் மதுரை மத்திய சிறைச்சாலைக்கும் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.