#நீட்: தமிழக மக்களுக்கு தேவையான போராட்டம்; அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் பேட்டி. இன்றைய போராட்டம் தமிழக மக்களுக்கு தேவையான போராட்டம் அதனை நாங்கள் இன்று சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கிறோம். அநாகரீகத்தின் மொத்த வடிவாக பா.ஜ.க., வினர் சுற்றி கொண்டிருக்கிறார்கள்
திமுக தொண்டனின் கால் நகத்தில் இருக்கும் அழுக்கிற்கு கூட தகுதியற்ற அண்ணாமலை எங்கள் தலைவரை பற்றி எப்படி பேச முடியும்.
திமுகவினருக்கு இதை விட அநாகரீகமாக பேச தெரியும் ஆனால் நாங்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் இருக்கிறோம்.
ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு கனிமவளம் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதித்துள்ளது. குவாரிகள் இருப்பதை 10 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு வந்தவர் யார் என்பதை கேளுங்கள்
பாராளுமன்ற நடைமுறைக்கு உகராத வார்த்தைகளால் நான் பிரதமரை பேசவில்லை. சனாதனம், செங்கோல் குறித்து எனக்கு கருத்து சொல்லுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இந்நாடு ஜனநாயக நாடாக குடியரசு நாடாக அமைவதற்கு முன்னால் ஆட்சியாளர்களின் அடையாளம் செங்கோல்.
மக்களாட்சி வந்த பின் நாட்டின் ஆட்சி அடையாளம் என்பது அரசியல் சாசனம் . அந்த கருத்தை நான் சொல்வதற்கு கூட எனக்கு உரிமை இல்லை என்று அண்ணாமலை நினைத்தால் அது அவரது காரியம்.