276 அடி நீளமுள்ள  பிரம்மாண்ட தேசிய கொடி  ஊர்வலம்…!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில்  77வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு  தனியார்  பள்ளி  சார்பில்  276 அடி நீளமுள்ள  பிரம்மாண்ட தேசிய கொடி  ஊர்வலம்  நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர்  பேரூராட்சியில்  77வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு  தனியார்  பள்ளி சார்பில்  நேற்று  276 அடி  நீளமுள்ள  தேசிய கொடி  ஊர்வலம்  நடைபெற்றது. இதனை  வேப்பங்குப்பம்  காவல் நிலைய ஆய்வாளர்  நாகராஜன்  கொடியசைத்து தொடங்கி  வைத்தார்.

இந்த  ஊர்வலமானது வேப்பங்குப்பம் காவல்  நிலையத்தில்  இருந்து  தொடங்கி  வேப்பங்குப்பம், அரசு  ஆண்கள்  மற்றும்  பெண்கள்  மேல்நிலைப் பள்ளி  வழியாக  ஒடுகத்தூர்  பேருந்து நிலையத்தில்  முடிந்தது.  

இதில்,  தனியார் பள்ளி மாணவர்கள்  தங்கள்  கைகளில்  தேசிய  கொடியை  ஏந்தியபடி  சென்றனர்.  அப்போது,  வழிநெடுகிலும்  நின்றிருந்த  பொதுமக்களுக்கு  1000  மரக்கன்றுகள்  இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும்,  இதில்  சிறுவர்கள்  50க்கும்  மேற்பட்டோர்  காந்தி  வேடமிட்டபடி  ஊர்வலத்தில்  கலந்து  கொண்டனர். பின்னர்,  பேருந்து நிலையத்தில்  தேசிய  கொடி  ஏற்றி  மரியாதை  செலுத்தப்பட்டது.  இதில்,  ஏராளமான  மாணவர்கள்,  பொதுமக்கள்  கலந்து  கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *