இந்துத்துவா சக்திகளை தடுக்க, திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும்; வைகோ உருக்கமான பேச்சு

நான் இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு எங்கும் சொகுசு அறை போட்டு தங்கவில்லை. இதனை யாரையும் ஒப்பிடுவதற்காக கூறவில்லை. ஆனால், இன்று நடைபயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது, விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக என் மீது தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. அந்த வழக்கில் எனக்கு தண்டனை கிடைத்தாலும் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.

ஆலோசனை கூட்டம் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15 -ந் தேதி மதுரையில் நடக்கிறது. இதனையொட்டி, மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று, தெப்பக்குளம் தனியார் அரங்கில் நடைபெற்றது. 

மதிமுக எம்.எல்.ஏ. பூமிநாதன், உள்ளிட்ட மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு ஆலேசானைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி துவங்குவேன் என்றோ, அதை இத்தனை ஆண்டுகள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரையும் கொடுக்க துணிந்து தான் தி.மு.க.வில் பணியாற்றினேன். 

பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை தமிழகத்திற்கு கொண்டு வந்து, திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கிறார்கள்.

கலைஞர் உடல்நலம் குறைந்த காலத்தில் தான் சனாதன இந்துத்துதுவா சக்திகள் திராவிட இயக்கங்களை அழித்துவிட நினைத்தார்கள். வாஜ்பாய் மறைவிற்கு பிறகு தீவிரமாக அழிக்க நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை இங்கு கொண்டு வந்து வைத்து திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கிறார்கள். 

அரசியலுக்கு நான் வந்து 50 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் எத்தனை ஆண்டுகள் இருப்பேன் என தெரியாது. குரல் உடைந்து கண் கலங்கினார், ஸ்டெர்லைட் நிறுவனர் அனில் அகர்வால் அரை மணி நேரம் என்னை தனியாக சந்திக்க வேண்டும் என்றார். நான் 5 நொடி கூட சந்திக்க முடியாது என்று மறுத்தேன். 

மதிமுக தொண்டனுக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதற்காக நான் அவரை சந்திக்கவில்லை. மதிமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். ஸ்டெர்லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரியாறு அணையை பாதுகாத்தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப்படி எவ்வளவோ செய்துள்ளோம்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக என் மீது தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. அந்த வழக்கில் எனக்கு தண்டனை கிடைத்தாலும் சிறை செல்லவும் தயாராக உள்ளேன். ம.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். ஸ்டெர்லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரியாறு அணையை பாதுகாத்தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப்படி எவ்வளவோ செய்துள்ளோம்.

தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால், இந்துத்துவா சனாதன சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்து கோர்த்துக் கொள்வோம். விமர்சனங்கள் எவ்வளவோ வரலாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அது நம்முடைய கடமையாக இருக்கிறது.  அதற்கு திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும்.

நடைபயணம் நான் இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தாமிரபரணி முதல் சென்னை வரை என பல முறை நடைபயணம் செய்திருக்கிறேன். அன்று  நடைபயணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது. எல்லா இடத்திற்கும் நடந்துதான் செல்வேன். மக்களுடன் மக்களாக இருப்பேன். சாலையோரங்களில் ஓய்வெடுப்பேன். 

எங்கும் அறை போட்டு தங்கவில்லை. இதனை யாரையும் ஒப்பிடுவதற்காக கூறவில்லை. ஆனால், இன்று நடைபயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது.

தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க. தியாகத்தால் உருவாக கட்சி. தொண்டர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன்.  மதுரையில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும். 

சனாதன சக்திகளை தடுக்க நாம் திமுகவை பாதுகாக்க வேண்டும். திராவிட இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். அதற்காக போராட வேண்டும்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *