2024 தேர்தலில் பாசிச பாஜக அரசு கழுவறை செல்லும்… முஹம்மது சித்திக் உறுதி
2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். மோடி தலைமையிலான பாசிச அரசு கழுவறை செல்லும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது சித்திக் கம்பம் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேட்டி.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மதவாத பிஜேபி அரசை கண்டித்து கம்பம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகில் நடைபெற்றது.
ஹரியானாவில் முஸ்லிம்களையும் படுகொலை செய்து மிக பெரிய கலவரத்தை நடத்தி வரும் பாசிச சக்திகளை கண்டித்தும், ஜெய்பூர் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் முஸ்லிம்களை தேடி தேடி சுட்டு கொன்ற சேத்தன் சிங் என்கிற அயோக்கியனை தூக்கில் போட கூறியும், மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோசமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர் முஹம்மது சித்திக் அவர்கள் கண்டன உரையாற்றினார்.