தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை; தமிழக அரசு அதிரடி 

வெளி சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் 500 நியாய விலை கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. 

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 10 நியாய விலை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.  ஈரோடு  கொல்லம்பாளையம் கூட்டுறவு அங்காடியில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 

10 கடைகளிலும் தலா 100 கிலோ வீதம் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு தினசரி காய்கறி சந்தையில் 1 கிலோ தக்காளி 140 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *