வைரல்: 6 மாத  குழந்தைக்கு நோபல் உலக சாதனை நிறுவன சர்வதேச விருது…!

 ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா  மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மாதக் குழந்தை சர்வதேச விருதை பெற்றுள்ளார். கடப்பா மாவட்டம் புரோதட்டூர் நகருக்கு உட்பட்ட சாஸ்திரிநகரை சேர்ந்த பவன்குமார் –  சௌமியா பிரியா தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். பவன்குமார் துணி வியாபாரம் செய்து வரக்கூடிய நிலையில் சௌமியா பிரியா வீட்டில் இருந்தபடி குழந்தைகள் பார்த்து கொண்டு வருகிறார். 

வீட்டில் உள்ள பணிகளை முடித்த பின்னர் தனது 6 மாத  மகன் பிரஜ்வலுக்கு விலங்குகள், பழங்கள், வாகனங்கள், எண்கள், பறவைகள் மற்றும் காய்கறிகளின் படங்களைக் காட்டி   பெயர்களைக் கற்பித்து வந்தார். இதனை கவனித்து வந்த  பிரஜ்வல் அவரது அம்மா செளமிய பிரியா படத்தை காண்பித்து   பெயர்களை கூறி  அடையாளம் கண்டு கையால் சைகை செய்து கண்டுபிடித்து வந்துள்ளார்.  

இது தொடர்பான வீடியோவை நோபல் உலக சாதனை நிறுவனத்துக்கு கடந்த 19ம் தேதி பெற்றோர் அனுப்பி வைத்தனர். இதனை பார்த்த  ஏற்பாட்டாளர்கள் குழந்தையின் திறமையைப் பாராட்டி இம்மாதம் 29ஆம் தேதி ஆன்லைனில் விருதை வழங்கினர். இதேபோன்று அவர்களது மகள் வினிஷாவும் நான்கு வயதில் ஐந்து விருதுகளை வென்றதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *