மணிப்பூர் கலவரத்தை கண்டித்து அமித்ஷாவிற்கு கருப்பு கொடி காட்டிய  காங்கிரஸ்…! 

மணிப்பூர் பழங்குடி மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து மதுரை வரும்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு காங்கிரஸ் கட்சி  SC ST பிரிவின் மாநில தலைவர் ரஞஜன் குமார் தலைமையில் 20 பெண்கள் உள்பட 70 பேர் பெருங்குடி அம்பேத்கார் சிலை முன்பு கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்தினர்

மதுரை மாநகர் தெற்கு காவல் துணை ஆணையர் சாய் பிரதிப் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் வேளையில் கருப்பு கொடி ஆர்பாட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேசுவரத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் டெல்லி யில் இருந்து, பிற்பகல் 4 மணிக்கு மதுரை விமான நிலைய ம்  வருகிறார்.அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம்,  ராமேஸ்வரம் செல்கிறார்.

இந்த நிலையில், மதுரைக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா வுக்கு எதிர்ப்பு தெரிவிதது  , மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி அம்பேத்கர் சிலை காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி விமான நிலைய முற்றுகை  போராட்டம்  நடைபெறுகிறது. இதை தொடர்ந்து , பெருங்குடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *