நியோ மேக்ஸுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை!
நியோ மேக்ஸ் தொடர்புடைய 30 இடங்களில் 2 வது முறையாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது.
மதுரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிறுவனத்தில் பொதுமக்கள் பலர் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை இழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல் முறையாக காளவாசல் அருகே உள்ள நியோ மேக்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து,சகாய ராஜா உள்ளிட்ட நியோ மேக்ஸ் கிளை நிறுவனத்தை சேர்ந்த 4 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று மதுரை , விருதுநகர் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நியோ மேக்ஸுக்கு சொந்தமான இடங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நேற்று வரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட 100 புகார் மனுக்களில் 22 கோடி ரூபாய் வரை பணம் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைக்க ப்பெற்றது குறிப்பிடத்தக்கது.