நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாப பலி
ஆந்திராகில் மின்சாரம் தாக்கி பலியான ரசிகர்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி சூர்யா ஆறுதல் இறந்த ரசிகரின் சகோரதரி கேட்ட கொண்டவுடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்த சூர்யா
நடிகர் சூர்யா தனது 48-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் தடபுடலாக கொண்டாடினர். அவ்வாறு ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் சூர்யா ரசிகர்கள் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும், அனாதை இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்கு பரிசு பொருள்கள் கொடுத்தும், பைக் பேரணி என பல்வேறு விதமாக கொண்டாடினர்.
அவ்வாறு ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பிளக்ஸ் பேனர் கட்டி கொண்டுருந்த வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர் சாய் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். கல்லூரியின் ஒன்றாக படித்து வந்த இருவரும் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர்கள் ஆவர்.
இதனால் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர்கள் உற்சாகத்துடன் பேனர் கட்டும் போது பலியான சம்பவம் சூர்யா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மனமுடைந்துபோன நடிகர் சூர்யா, உடனடியாக உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உயிரிழந்த ரசிகர்களின் பெற்றோர்கள் கண்ணீர்விட்டு அழுததை பார்த்து கலங்கிப் போன சூர்யா, இந்த இழப்பு தன்னை மிகவும் பாதித்ததாகவும், இரு தம்பிகளை இழந்திருப்பதாகவும் கூறினார்.
அவர்கள் குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும் எப்போது வீட்டில் ஒருவராக துணையாக இருப்பேன் என்ன வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்தார். அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிய சூர்யா, தன் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
மேலும் இறந்த சாயி என்ற இளைஞர் வீட்டில் தாத்தா, அப்பா என வீட்டில் ஒரே ஆண் துணையாக இருந்த நிலையில் அவரும் இறந்து விட்டதால் சாயி சகோதரி டிகிரி படித்துள்ளதால் குடும்பத்தை காப்பாற்ற அவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும்படி கேட்டு கொண்டனர். அதனை ஏற்ற சூர்யா கட்டாயம் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி உறிதி அளித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.