அடுத்த அமைச்சரை டார்கெட் செய்த அமலாக்கத்துறை…!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தன்னையும் ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று 11 மணிக்கு மேல் விசாரணைக்கு வர உள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகாத நிலையில்  அவரது மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்.

 அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *