ரேசன் கடையில் மலிவு விலைக்கு தக்காளிகள் விற்பனை ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்
மதுரையில் ரேசன் கடையில் மலிவு விலைக்கு தக்காளிகள் விற்பனை ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைச்சல் குறைவாள் தக்காளியின் விலை தினம்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள 300 ரேசன் கடைகளில் மலிவு விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதி 16 கடைகள் என 23 ரேசன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிச்சந்தையில் 120 வரை தக்காளி விற்கப்படும் நிலையில் பாதி விலைக்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.