பிரதமர் பதவி விலக வேண்டும்… காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் சூரத் உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், மத்திய மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பிரதமர் மோடி குறித்து, ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ராகுலுக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நேற்று இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, மத்திய பாஜக அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கரூர் மாநகர தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

கரூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *