5-ம் வகுப்பு மாணவியிடம் பாலியியல் சீண்டல்.. ராணுவ வீரர் கைது..

கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் 5 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியியல் சீண்டலில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர் செய்யப்பட்ட பாலியல் குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து  போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி  தனது தாய் தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து  வருகிறார். 

சிறுமி  குடும்பத்தினருடன் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது 10 வயது மகள் அலறல் சத்தம் கேட்டு வெளிய வந்து பார்த்த சிறுமியின் தந்தை ஒரு நபர் ஒருவர் தனது வீட்டில் இருந்து ஓடுவதை கண்டுள்ளார். தொடர்ந்து அவர் தனது மகளிடம் விசாரிக்கையில் தனது மகள் அந்த மர்ம நபரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானது தெரியவந்தது, 

இதனையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் ராம்குமார் என்ற ராணுவ வீரர் அத்துமீறி சிறுமி வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

அதனைத் தொடர்ந்து ராம்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இது ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் வீட்டில் ஆஜர் படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி ராம்குமார் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் இதனை அடுத்து ராம்குமார் விருதுநகர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *