நாமக்கலில் பயங்கர சத்தம், நில அதிர்வா? அச்சத்தில் மக்கள்..!
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் 1.21 மணிக்கு அதிக சத்தத்துடன் அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வா ?
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மதியம் 1.21 மணிக்கு பயங்கர சத்தம் எழுந்தது. இந்தச் சத்தத்தை கேட்ட பொதுமக்கள், தங்கள் வீடுகளில் இருந்தும், வணிக நிறுவனங்களில் இருந்தும், வெளியே வந்து பார்த்தனர். இந்த சத்தம், நாமக்கல், அனியாபுரம் மோகனுார், என சுற்று வட்டாரத்தில், அதிக சத்தத்துடன் அதிர்வுடன் உணரப் பட்டது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் கூறும்போது, நாமக்கல், அனியாபுரம் மோகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடி சத்தம் போன்ற அதிக சத்தம் உணரப்பட்டதாகவும், லேசாக அதிர்வு இருந்ததாகவும் பொதுமக்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டு உள்ளன. அந்தச் சத்தம், நில அதிர்வால் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், நில அதிர்வு குறித்து எந்தவிதமான பதிவும் இதுவரை பெறப்படவில்லை. அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.