அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை… அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை என உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் குற்றச்சாட்டு – ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளிகளின் பசியை போக்கும் அம்மா உணவத்தை ஆய்வு செய்து தரமான உணவுகளை வழங்க கோரிக்கை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்றது.,
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன்., பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன் வைத்தார்.,
கூட்ட முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ அய்யப்பன்., உசிலம்பட்டி நகர் பகுதியை விரிவாக்கம் செய்யவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.,
மேலும் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் தரமற்ற முறையில் உள்ளதாக குற்றச்சாட்டினார்., ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளிகள் தினசரி வந்து சாப்பிட்டு விட்டு செல்லும் அம்மா உணவகத்தில் உணவு தரமாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் எனவும்,
புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு பணிகளை விரைவில் துவங்கி புதிய பேருந்து நிலையத்தை கட்ட நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும்,
உசிலம்பட்டி நகராட்சிக் கூட்டுக் குடிநீர் திட்டம் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும், தற்போது வரை உசிலம்பட்டி பகுதிக்கு தண்ணீர் வழங்கவில்லை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 73 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட திட்டம், தற்போது சோதனை ஓட்டம் மட்டுமே நடைபெற்று வருகிறது அதை விரைந்து முடித்து அனைத்து பகுதி பொதுமக்களுக்கு தண்ணீரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக பேட்டியளித்தார்.,