இம்மாதம் 26 முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைகவசம்  கட்டாயம் 

கோவையில் வரும் 26 ஆம் முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைகசம் அணிய வேண்டும் – மீறினால் சட்ட நடவடிக்கை மாநகர போலீசார் அறிவிப்பு.

கோவையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், காவல் துறை அதிகாரிகள், நொடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மேற்கொண்ட ஆலோசனை அடிப்படையில் வரும் 26 ஆம் தேதி  முதல்  இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைகசம் அணிய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கடந்த மே மாதத்தில் நடந்த சாலையில் விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைகவசம் அணியாததால் உயிரிழந்தது தெரியவந்தது. 

ஒரே மாதத்தில் 85% உயிரிழப்பு தலைக்கசவம் அணியாமலும், பின்னால் அமர்ந்து வருவோரும் உயிரிந்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *