அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…! கரூர் முழுவதும் போலீசார் குவிப்பு

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதன் எதிரொலி – அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவு.

மேலும், கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் கரூர் வந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *