நெதர்லாந்து நாட்டு இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர் போக்சோவில் கைது..
கொடைக்கானலில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த அஞ்சுரான் மந்தை பகுதியைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..
கொடைக்கானல் பேத்துப்பாறை கிராம பகுதி அஞ்சுரான்மந்தை கிராமத்தில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எஸ்தர் , அவரது கணவர் டெரிசன் மற்றும் இவர்களது இரட்டை பெண் குழந்தைகள் ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் (53) வசித்து வந்துள்ளார்.ஊரின் தலைவராக ராமராஜ் இருந்து வந்ததால் அடிக்கடி அருகில் உள்ள சிறுமிகளின் வீட்டிக்கு சென்று வந்துள்ளார்.
நெதர்லாந்தை சேர்ந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டலில் ராமராஜ் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் பெண் குழந்தைகளின் தாயார் புகார் அளித்தார்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட ராமராஜை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.