காங்கிரசை வீழ்த்த ஊழல் பின்னால் ஓடி ஒளிகிறார் அமித்ஷா… கே.எஸ்.அழகிரி விலாசல்

தமிழ்நாடு காங்கிரஸ் தமிழ் தலைவர் கே எஸ் அழகிரி இன்று சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருக்கிறார். அவர் ஊழல் நிறைந்த அரசாங்கம் என காங்கிரஸ் அரசாங்கத்தை குறை சொல்கிறார். இது அப்பட்டமான பொய். பேரறிஞர் மன்மோகன்சிங் போன்ற நேர்மையான நியாயமான பிரதமராக மோடியால் ஒரு காலமும் இருக்க முடியாது

2 ஜி வழக்கில் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால் அதற்குரிய ஒரு ஆதாரத்தை கூட கொடுக்கவில்லை. அதனால் அந்த வழக்கை நீதிபதி ஷைனி தள்ளுபடி செய்தார். அந்த வழக்கில் அப்பாவியான ராஜா, கனிமொழி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர். ஒரு அரசை வீழ்த்துவதற்காகவே அது நடந்தது 

தமிழக மேம்பாட்டிற்காக புதிதாக எந்த திட்டத்தை வழங்கி இருக்கிறீர்கள் என அழகிரி கேள்வி. முதலமைச்சரின் கேள்வியை புரிந்து கொள்ளாமலேயே அமைச்சர் அமித்ஷா பதில் சொல்லி இருக்கிறார் தமிழகத்தில் சென்னை மகாபலிபுரம் – கடலூர் ரயில்வே திட்டம், திண்டிவனம் செஞ்சி – நகரி ரயில் திட்டம் போன்றவை 9 ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை

மும்பையில் இருந்து குஜராத் வழியாக டெல்லிக்கு சிறப்பு காரிடார் சாலை வசதிக்கு இரண்டு லட்சம் கோடி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அதுபோல் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு ஏன் இல்லை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட பல்வேறு மருத்துவமனைகள் கட்டிடம் கட்டப்படுகிறது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டிடம் கட்டப்படவில்லை என குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *