ஊட்டி மலை ரயில் தடம் புரண்டது… பதட்டத்தில் பயணிகள்…!
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயில் கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து வெளியேறியதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி தினந்தோறும் இரண்டு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது. 150 பயணிகளை ஏற்றுக் கொண்டு குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மலை ரயிலின் கடைசி பெட்டி திடீரென தண்டவாளத்தில் இருந்து வெளியேறிது. உடனடியாக மலை ரயில் நிறுத்தப்பட்டது.
பெட்டி மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தம் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.