ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அனைத்து மதத்தினர்…!

ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆத்மா அமைதி பெற வேண்டியும், இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைவில் குணமடைய வேண்டியும்  இன்று இரவு பாபநாசம் அருகே பண்டாரவாடையில் சர்வ மதத்தினர் பங்கேற்ற அஞ்சலி நிகழ்வில் பலர் பங்கேற்பு. 

ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில்  நிகழந்த ரயில் விபத்தில் 280 நபர்களுக்கு மேல் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இக் கோரநிகழ்வில் உயிரிழந்தவர்கள் ஆத்மா அமைதி பெற வேண்டியும், மருத்துவமனைகள் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் இன்று இரவு பாபநாசம் அருகே பண்டாரவாடை கிராமத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், என சர்வ மதத்தினரும் பங்கேற்ற அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதில் அவரவர் மத வழக்கப்படி உயிரிழந்த நபர்கள் ஆத்மா அமைதி பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைவில் குணமடைய வேண்டி சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மச்சபூரீஸ்வரர் ஆலயத்தின் அர்ச்சகர் , பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தின் இணை பங்குத்தந்தை தார்திஸ், பண்டாரவாடை சாலை பள்ளிவாசலின் இமாம் உள்ளிட்ட  சர்வ மதத்தினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *