திடீரென அரிசி விலை கிலோவிற்கு ரூ.6 உயர்வு… அதிர்ச்சியில் மக்கள்…!
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்திடும் நெல்லின் அளவில் பொது விநியோக திட்டத்திற்க்காக ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கிட அரசே கனிசமாக கொள்முதல் செய்துவிடுவதால்,
தமிழக மக்கள் கர்நாடகா பொன்னி அரிசியையும், ஆந்திரா அரிசியையும் சாப்பிட்டு பழகிவிட்ட நிலையில், தஞ்சை உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் ஒரு கிலோ 44 ரூபாய்க்கு விற்ற கர்நாடகா பொன்னி புதிய அரிசி தற்போது 50 ரூபாயாகவும்
கர்நாடகாவில் கடந்த நவம்பரில் அறுவடை செய்த பழைய அரிசி ஒரு கிலோ 50 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும் உயர்ந்துவிட்டது என்றும் திடீர் அரிசி விலை உயர்வுக்கு கர்நாடகாவில் கோடை வெள்ளாமை குறைந்துவிட்டது ஒரு காரணம் என்றும், புதிய அரசு அம்மாநிலத்தில் நபர் ஒருவருக்கு 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கிட முடிவு செய்து அதற்க்காக அரிசி ஆலை அதிபர்களிடம் மொத்தமாக அரிசி கேட்பதால்,
தமிழக அரசி வணிகர்களின் ஆர்டர்களை கர்நாடக அரிசி ஆலை நிர்வாகிகள் வாங்காமல் உள்ளதாலும் அரிசி விலை உயர்ந்துவிட்டது என்றும் இதே போல் ஆந்திராவில் நெல் விளைச்சல் குறைந்துவிட்டதால் ஆந்திரா அரிசி வரத்தும் குறைத்துவிட்டது
இதே போல் கொல்கத்தாவிலிருந்து வரும் அரிசியின் அளவும் கனிசமாக குறைந்துவிட்டது என்றும் திடீர் அரசி விலை உயர்வுக்கு காரணம் கூறும் அரிசி வணிகர்கள் கர்நாடகாவில் நவம்பர், டிசம்பரில் தான் அடுத்த நெல் அறுவடை அது வரை மேலும் அரிசி விலை உயருமே தவிர குறையாது என்றும் தஞ்சை அரிசி வணிகர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.