காவேரி ஆற்றில் மூழ்கி கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக பலி…!

எடப்பாடி பூலாம்பட்டி காவேரி ஆற்றில் கணவன் மனைவி இருவரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த ஜனர் (27)பவித்ரா (24) ஆகிய இருவரும் மூலப்பாறை என்ற இடத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு பவித்ரா சென்றுள்ளதால் நீரில் மூழ்கிய போது அவரது கணவர் உடனடியாக காவிரியில் குதித்து காப்பாற்ற முயற்சித்த போது இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன கணவன் மனைவி இருவருக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *