தமிழ்நாட்டில் வழுக்கும் மல்யுத்த பாலியல் பிரச்சனை போராட்டம்…!
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிஜ்பூசன் சரண்சிங்கை கைது செய்யக் கோரி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேனியில் அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக மதுரை சாலையில் இருக்கும் இந்தியன் வங்கியை முற்றுகை இடுவதற்காக ஊர்வலமாக வந்தவந்த போராட்டக்காரர்கள் பாலியல் புகாரில் பாஜக எம்பியை கைது செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து இந்தியன் வங்கியை முற்றுகையிட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 க்கு போற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.