பாஜக எம்.பி. பிரிஜ் பூஷனை கைது செய்யகோரி மாணவர்கள் ரயில் நிலைய முற்றுகை…!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த BJP எம்.பி பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் வழக்கு பதிவு செய்து இதுவரை கைது செய்யாத டெல்லி காவல்துறையின் கண்டித்தும்… மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்த மாணவர் அமைப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கமசார்பாக பிஜேபி அரசை கண்டித்து இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரயில் நிலைய முன்பாக பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போலீஸ் பாதுகாப்பு மீறி மாணவ சங்கத்தினர் மற்றும் மாத சங்கத்தினர் போராட்டம் நடத்தினர் மத்திய அரசுக்கு எதிராகவும் டெல்லி காவல்துறை கண்டித்தும் போராட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எம்.பி யின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்து சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *