மண் சாலைகளே இல்லாத தமிழ்நாடாக மாற்றுவோம்… அமைச்சர் கே.என்.நேரு உறுதி

KN Nehru

தமிழகத்தில் 899.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தூத்துக்குடியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ்  புதிய  கட்டிடங்களை திறந்து வைத்து தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மூலமாக தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் 71 கோடி ரூபாய் மதிப்பில்  முடிவுற்ற கட்டிடங்களை திறந்து  வைத்தார். திருச்செந்தூர் , காயல்பட்டிணத்தில் குடிநீர்,பாதாள சாக்கடை  உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து

தூத்துக்குடியில் புதிதாக தார் சாலைகள் போடும்போது மன்சாலைகள் இல்லாத அளவுக்கு முழுமையாக தார்சலைகள் போடப்படும். நகர பகுதிகளில் உள்ளாட்சிகளில் விரைந்து பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.குடிநீர் உள்ளிட்ட  பணிகளுக்கு  முன்னுரிமை அடிப்படையில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன், மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகங்கள் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மாநகராட்சி மேயர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *