வரதட்சணை கொடுமையால் இறந்த கர்ப்பிணியின் உடலை கணவர் வீட்டு வாசலில் புதைத்து போராட்டம்

திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகக்கூடிய நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த பெண்மணி வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை கணவர் வீட்டு முன்பு பெண்ணின் உறவினர்கள் குழி தோண்டி புதைக்க முயன்று வருவதால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த துவரவயல் அருகே உள்ள மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி விஜயா தம்பதியரின் மகன் அரவிந்த் (25). இவருக்கும் சவேரியார் பட்டினத்தைச் சேர்ந்த குமரன் என்பவரது மகள் நாகேஸ்வரி(22) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் நாகேஸ்வரி 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். 

இந்நிலையில் நாகேஸ்வரியை அவரது மாமனார் மாமியார் கணவர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் நாகேஸ்வரி நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாகேஸ்வரியின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்த உடலை வாங்காமல் வாக்குவாதம் செய்த நிலையில் 

தற்பொழுது உடலை வாங்கிய நாகேஸ்வரியின் உறவினர்கள் அவரது கணவர் அரவிந்த் வீட்டின் முன்பு நாகேஸ்வரியின் சடலத்தை குழிதோண்டி புதைக்க முயன்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்பொழுது காவல் துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *