வேங்கைவயல் குற்றவாளிகளை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை… அதிரடி காட்டும் அரசு
வேங்கைவயல் விவகாரம் குற்றவாளிகளை கண்டறிய மருத்துவர்கள் நேரம் கொடுத்த பிறகு இன்று டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தகவல்
இறையூர் வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிய முதற்கட்டமாக வேங்கைவயல் இறையூர் கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தை நாடிய நிலையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு டி என் ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி எடுக்க அனுமதி வழங்கியது.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர் தலைமையிலான மருத்துவ குழுவினர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்க உள்ளதாகவும் 10 மணிக்கு மேல் மருத்துவர்கள் நேரம் கொடுத்த பிறகு பிறகு 11 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தகவல்.