டிராக்டர் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது நடந்த கொடூரம்… கணவன் மனைவி இருவரும் தலை நசுங்கி பலி

மனைவிக்கு டிராக்டர் ஓட்ட பழக்கிய போது விபத்து:, பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டரின் அடியில் சிக்கி கணவன் மனைவி இருவரும் தலை நசுங்கி பலியான சோகம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருவாளா பஞ்சாயத்திற்கு உட்பட்ட மூலக்காடு எனும் இடத்தில் சிவக்குமார் கீதா தம்பதியினருக்கு 6 ஏக்கர் சொந்த நிலம் உள்ளது.

இந்நிலையில் இந்த நிலத்தில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.தக்காளி தோட்டத்தில் தக்காளி செடிகள் சாயாமல் இருக்க குச்சி வைத்து கட்டும் பணியில் கணவன் மனைவி இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

பணி நிறைவடைந்த நிலையில் தனது மனைவி கீதாவிற்கு டிராக்டர் ஓட்டுவதற்கு அருகில் அமர்ந்து சிவக்குமார் பழகி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் கணவன் மனைவி இருவரும் டிராக்டரின் அடியில் சிக்கி தலை நசுங்கி பலியான சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *