ரமலான் பண்டிகையை ஒட்டி ஆட்டு சந்தையில் ஒரே நாளில் 4 கோடி ரூபாய்க்கு விற்பனை

 தென் மாவட்டங்களில் மிக புகழ்பெற்ற சந்தை மேலப்பாளையம் கால்நடை சந்தையாகும் இந்த சந்தைக்கு திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விவசாயிகளும் வியாபாரிகளும் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம்

ரமலான் பண்டிகையை ஒட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகமாக காணப்படுகிறது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் இங்கு கொண்டுவரப்பட்டு தற்போது விற்பனை ஆகி வருகிறது சிறிய ஆடு 3000 முதல் 30,000 வரை விற்பனை செய்யப்படுகிறது

இன்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும் பொதுமக்களும் ரமலான் பண்டிகையை ஒட்டி ஆடுகளை வாங்கி செல்கின்றனர் மேலப்பாளையம் சந்தைக்கு ஆஸ்திரேலியா ஆடு விற்பனைக்கு வந்துள்ளது இந்த ஆடு எட்டாயிரம் ரூபாய் முதல் 11 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *