சிறுமியை கடத்தி திருமணம் செய்தவருக்கு 26 ஆண்டு சிறை தண்டனை…!
சிறுமியை கடத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளிக்கு 26 ஆண்டு சிறை தண்டனை. ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியை சேர்ந்தவர் தங்கராஜ். கூலி தொழிலாளியான இவர் 16 வயது சிறுமி 10 ம் வகுப்பு மாணவியை சேலத்திற்கு கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். மேலும் கட்டாயபடுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் கடந்த 2020ம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.இதில் குற்றம் சாட்டப்பட்ட தங்கராஜுக்கு மூன்று பிரிவுகளுக்கு 26 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மாலதி உத்தரவிட்டார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.