இந்தியாவில் அடுத்து 4ஆம் அலை? மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!
ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி
இந்தியாவில் கடந்த சில காலமாக கொரோனா பாதிப்பு திடீரென மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது அடுத்த அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.இந்தியாவில் கடந்த 2020இல் கொரோனா பரவ தொடங்கியது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் மூன்று முறை இதுவரை கொரோனா அலை ஏற்பட்டு, வைரஸ் பாதிப்புகள் உச்சம் தொட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை மிக மோசமாக இருந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடங்கிப் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அந்த வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
வேக்சின் பணிகள் தொடங்கி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னரே கொரோனா பாதிப்பு குறைந்தன. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் மெல்ல நீக்கப்பட்ட நிலையில், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனிடையே கடந்த சில காலமாக வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த பிப். மாதத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு பல மடங்கு நமது நாட்டில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,357. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் கேஸ்கள் எண்ணிக்கை 32,814ஆக உயர்ந்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் கூட தினசரி கொரோனா பாதிப்பு 300ஐ தாண்டியுள்ளது. கடந்த மூன்று கொரோனா அலைகள் ஏற்பட்ட பாதிப்பு மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை. இதனால் இப்போது கொரோனா அதிகரிப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.