இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட நபர் போக்சோவில் கைது…!

கோபி அருகே இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவிட்டதோடு, இளம்பொண்ணின் கணவருக்கும் தரக்குறைவாக மெசேஜ் அனுப்பிய வாலிபர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்தவரின் மகள் ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் விக்னேஷ்(27) என்பவர்  கடந்த 2019ம் ஆண்டு காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். அதைத்தொடர்ந்து இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்த விக்னேஷ், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். அதில் இளம்பெண் மயங்கியதும், அவருடன் ஆபாசமாக இருப்பது போன்று ஆபாச படங்களை எடுத்து வைத்து மிரட்டி உள்ளார்.

அதைத்தொடர்ந்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் இருந்து விக்னேஷ் வந்துள்ளான்.

இந்நிலையில் இளம்பெண்ணிற்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விக்னேஷ்,  இளம்பெண்ணின் கணவருக்கு ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் மெசேஜ் அனுப்பி உள்ளார். 

இதுகுறித்து இளம்பெண்ணிண் தாயார் அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் விக்னேஷ் மீது 509(பெண்ணின் அடக்கத்தை அவமதித்தல்) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *