அக்னிச் சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு! எடப்பாடி சிஎம் ஆகனுமாம்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னிச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றிருப்பது தனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.திமுக ஆட்சியை பற்றி கேள்வி கேட்டு தன்னை மாட்டிவிட வேண்டாம் என செய்தியாளர்களிடம் கெஞ்சிய நடிகர் கஞ்சா கருப்பு, திமுக ஆட்சியை பற்றி மக்களுக்கே நல்லா தெரியும் என பீடிகை போட்டு சிரித்தார்.திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்திருப்பதாகவும், விலைவாசி உயர்வு இருப்பதாகவும் இதனால் மீண்டும் அதிமுக ஆட்சியே அமைய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டியிருப்பதாகவும் நடிகர் கஞ்சா கருப்பு கூறியிருக்கிறார்.

முன்பைக் காட்டிலும் தற்போது தனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதாகவும் இப்போது கூட நாற்காலி, இறைவன் மிகப் பெரியவன், என நான்கு திரைப்படங்களில் நடித்திருப்பதாக கூறினார்.இயக்குநர் அமீர் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இவர் அடிப்படையிலேயே அதிமுக அனுதாபியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் தன்னை உறுப்பினராகவே இணைத்துக் கொண்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு வந்த போதும் அதனை நாசூக்காக தவிர்த்து வந்தார். இதனிடையே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சிறிது காலம் கமல்ஹாசன் புகழ் பாடிக் கொண்டிருந்தார்.இப்போது எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்ற முழக்கத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.நடிகர் கஞ்சா கருப்புடன் சேர்ந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி அக்னிச்சட்டி ஏந்தி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *