ஸ்டெர்லைட் ஆலைக்கும் ஆளுநருக்கும் ஏதோ இருக்கு… போராட்டக்குழு குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் ஆளுநரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் ஆலை வெளிநாட்டு சதியின் காரணமாக போராட்டம் நடத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநரின் இந்த கருத்துக்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களின் தன் எழுச்சி காரணமாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல உயிர்கள் பறிபோய் உள்ளது, பலர் காயமடைந்துள்ளனர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் தன் எழுச்சி போராட்டத்தை ஆளுநர் கொச்சைப்படுத்துவது கண்டனத்திற்குரியது மேலும் ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து மூடப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மூடப்பட்டுள்ளது எனவே ஆளுநரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மேலும் தமிழக அரசு ஆளுநரின் இந்த கருத்தை வேடிக்கை பார்க்காமல் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், மேலும் ஆளுநருக்கு எதிராக ஆளுநரின் கருத்துக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பேச்சுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.