கடவுளுக்கே டஃப் கொடுக்கும் விசிக… பதட்டத்தில் போலீசார்…!

பேளுக்குறிச்சி:பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை மீட்க கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்த நிலையில்  அருள்மிகு பெரியமாரியம்மன் கோவிலுக்கு பலத்த  போலீஸ் பாதுகாப்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று (3-4 – 2023)கோயில் நுழைவுப் போராட்டம் அறிவிப்பால் பதற்றம்.

கோவில் வழிபாடு  தொடர்பாக  2017-ம் ஆண்டு  தொடரப்பட்ட வழக்கு    நிலுவையில் உள்ளதாலும், இந்த அறிவிப்பு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலா உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை தற்போது உள்ள நிலையே தொடர வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கோயிலுக்குள் இரு தரப்பினரும் உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில்நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்திரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *